ஒரு மனிதன் ஒரு விஷயத்தைக் குறித்த அறிவு பெற்றிருந்தால் அதன் மீது அளவு கடந்த நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பான். அதுவே, அதைக்குறித்த அறிவு இல்லாவிடில் அதனை அவமதிப்பதும் அதனை தீவிரமாக எதிர்க்கவும் செய்கிறான். இதனைப்போலவே, இஸ்லாமிய மார்க்கம் குறித்த அறிவின்மையே அதனை எதிர்ப்பவர்களிடம் காணமுடிகிறது.
அறிவைப்பெருதல் என்பது வெறுமனே அதனைக் குறித்த தகவல்களைப்பெருவது மட்டுமல்ல, அதனால் மனித வாழ்வில் ஏற்படும் நன்மை-தீமைகளை ஆராய்ந்து நன்மையானவற்றை மேற்கொள்வதும் அறிவின் ஓர் அங்கமாகும்.
இதனடிப்படையிலேயே, இஸ்லாமிய மார்க்கம் குறித்த அறிவை நமது குழந்தைகளுக்கு கொடும்ப்பது மட்டுமல்லாது, அது கூறும் வாழ்வியல் கோட்பாடுகளை பகுத்து அதனடிப்படையில் வாழ்வினை செலுத்துவதும் அறிவின் பண்புநலன்களில் முக்கியமான ஒன்று என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை
நாள்: மார்ச் 3, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..