Masjidhul Ihsaan - Coimbatore

முத்தலாக் தண்டனைச் சட்டம்..!!


இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பஜாக அரசு முஸ்லிம் பெண்களை முத்தலாகில் இருந்து காத்திடுமாறு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அவசர கதியில் நான்கே மாதத்தில் ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியும் உள்ளது.

இந்த மசோதாவின் மூலம் மத்திய அரசு முஸ்லிம்களை அவர்களது மத சுதந்திரத்தின் அடிப்படையில் வாழ்வியலை அமைத்துக்கொள்வதில் இருந்து மாற்றி அவர்களை பொது குடும்பவியல் சட்டத்தின் பாதையில் மடை மாற்றிடும் திட்டத்தின் முன்னோட்டமாகவே இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது.

இதே உச்ச நீதிமன்றம் பாபர் மஸ்ஜித் வழக்கில் வழங்கிய தீர்ப்பை குறித்து இவர்கள் கூறுகையில் எங்களது மத நபிக்கைக்கு எதிரான எந்த தீர்ப்பையும் நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம் என்று கூறியவர்கள் இப்போது முஸ்லிம் பெண்களுக்கான நீதி வழங்கிட சட்டம் வரையறை மேற்கொள்ளலாம் என்ற உச்சாநீதிமன்ற ஆலோசனையை மட்டும் செயல்படுத்திட துடிப்பது அதன் ரெட்டை நிலையை தெளிவாக காட்டுகிறது. 

இதனினும் மேலாக குடும்பவியல் விவகாரங்களின் அடிப்படையில் இதற்கு சட்டம் இயற்றமால் இதனை குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சிறை தண்டனை என கூறியிருப்பதன் மூலம் இந்திய முஸ்லிம் பெண்களின் வாழ்வினை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த எதேச்சாதிகார அரசு.

இந்த சட்டத்தை இந்திய முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்வது, இதற்கான சுய விழிப்புணர்வை எவ்வாறு பெறுவது என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 29, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



உயிரோட்டமான சாட்சிகள்..!!


இந்திய அளவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் தங்களது சுதந்திரத்தையும் உரிமைகளையும் நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் ஏவப்படும் சூழல் நிலவுகிறது.

இந்த இக்கட்டான வேலையில் முஸ்லிம் உம்மத்தின் ஒவ்வோர் அங்கத்தவரும் குர்ஆனின் அச்சில் நபியவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் உலக மக்களுக்கு இஸ்லாமிய வாழ்வியல் நெறியின் உயிருள்ள சாட்சிகளாக தங்களை மாற்றிகொள்ளவேண்டிய அவசியத்தை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 22, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1fKLDViJIxBSG_Xv7LnLRMQt34z1eihp2


மரணத்தின் செய்தி..!!



நமது குடும்பத்திலோ, உறவினரிலோ அல்லது நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரது மரணத்தின்போது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு வகையான தாக்காதை ஏற்படுத்திவிடும். அவ்வகையான தாக்கங்கள் நம் வாழ்வின் அடிப்படையே மாற்றிவிடக்கூடியதாக அமைந்துவிடும்.

மரணத்தை தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களாய் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதையும், மரணத்தைக் குறித்தான இஸ்லாமிய கருத்தோட்டங்களையும் அது மனிதகுலத்திற்கு வழங்கிடும் செய்தியினை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 15, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும் 


மக்களோடு நாம் மக்களுக்காக நாம்..!!


நபிகளார் (ஸல்) அவர்கள் சாமானிய முஸ்லிம்களின் வாழ்வில் எங்கே இருக்கிறார் என யோசித்தால் அது தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்க வழிபாடுகளுடன் ஒன்றார கலந்திருப்பதை பார்க்கலாம். இஸ்லாமிய அடிப்படையில் கூறவேண்டும் எனில் வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணத்திலும் நபிளார் (ஸல்) அவர்களின் பிரதியாகவே ஓர் முஸ்லிம் தன்னை வார்த்தெடுக்க வேண்டும்.

முஸ்லிம்களாகிய நமது வாழ்வில் வெறுமனே வணக்க-வழிபாடு என்ற பரிமாணத்தில் மட்டுமல்லாது மக்கள் நலனிலும் பங்கெடுத்திடவும் நம் சக மனிதர்களுக்கு மத்தியில் நபிகளாரின் வாழ்வியலை விளக்கிடும் வகையில் நமது வாழ்வியலை மாற்றியமைத்திட வேண்டிய தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.     

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 8, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



மௌலூதும் இஸ்லாமிய ஆன்மீகமும்..!!



ஆண்டுதோறும் ரபிய்யுல் அவ்வல் மாதம் நபிகளாரின் மீது புகழ்மாலை பாடுவதனால் தங்களின் நபிநேசத்தை வெளிப்படுத்துவதாகவும் அதன் மூலம் மறுமையில் பயன் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இஸ்லாமிய ஏகத்துவ கோட்பாட்டின் அடிப்படையினையே பலகீனப் படுத்தும் விதமாக ஒருசாரார் நடந்துகொள்கின்றனர். தௌஹீத் சிந்தனைப்போக்கு கொண்டு இந்த மௌலூது கலாச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறோம் எனும் பெயரில் ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றும் செயலின் உச்சமாக பள்ளியின் பாங்கு சொல்ல பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியில் மற்ற நேரங்களைவிட அதிகமான சப்தத்துடன் இந்த மௌலூது ஓதுவது ஆங்காங்கே நடந்துவருகிறது.

இஸ்லாமிய சமூகத்தின் புரையோடிப்போயுள்ள இப்படியான அனாச்சாரங்களை களைவதுடன், இந்த சமூகத்தின் மீது இறைவன் சாட்டியுள்ள கடைமைகளின் அடிப்படையில் மனித மனங்களை வென்றெடுக்கக் கூடியவர்களாய் மாறிட வேண்டிய இன்றியமையாத தேவையை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.    

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: டிசம்பர் 1, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்