Masjidhul Ihsaan - Coimbatore

சீர்கேட்டின் உச்சம் காதல்..!!



கோவை நகரைச்சேர்ந்த முஸ்லிம் பட்டதாரி யுவதி காதல் வயப்பட்டு இறுதியில் அவருடைய உயிரையே பறித்திட்ட சம்பவம் செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் மேலோட்டமாக வெளியிடப்பட்டது. பொதுவில் கல்வி குறித்து அதிக கவணம் செலுத்தாத ஓரு சமூகம் இன்று பெண்களின் கல்வி குறித்தும் அதன் அத்தியாவசிய தேவை குறித்தும் உணர்ந்து அதனை செயலாக்கம் செய்துவரும் இந்த தருணத்தில் இவ்வாறான நிகழ்வுகள் பெண்களுக்கு அந்த சமூகம் வழங்கிவரும் கொஞ்ச நஞ்ச சுதந்திரத்தினையும் பறித்திடும் வகையில் அமைந்துவிடுகிறது.

இவ்வாறான காதல் ஆண்-பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒழுக்க சீர்கேடாகவே இருக்கிறது. இளம் தலைமுறையினருக்கு இதனைக்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களது கடமைகளை அவர்களுக்கு உணர்த்துவதும், இறைவன் மீதான நம்பிக்கை மற்றும் மறுமை குறித்த அச்சத்தையும் அவர்கள் மனதில் ஆழவிதைப்பதுமே இந்த சீர்கேட்டில் இருந்து அவர்களை காத்திட நாம் மேற்கொள்ள வேண்டிய கடமை என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 27, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


மனித வாழ்வியலும் மறுமையும்..!!

தற்கால முஸ்லிம் சமூகத்தில் தொழுகை, நோன்பு போன்ற இபாதத்துகள் குறித்த விழிப்புணர்வு மேலோங்கியுள்ள நிலையில், இஸ்லாம் கூறும் வாழ்வியல் நெறிகளின்படி அவர்களின் வாழ்கையை முறைபடுத்திக்கொள்ள வெகு சிலரே முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.


இதற்கான முக்கிய காரணி மறுமை குறித்த அச்சமின்மையே ஆகும். இறைவன் மனிதனுக்கு அருளிய வளங்களையும் அவனது ஆயுளையும் எவ்வாறு செலவழித்தான் என்று மறுமையில் இறைவனிடம் கணக்கு சமர்ப்பிக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை மறந்து உலகின் வனப்பில் மறுமையை மறந்துவிடுகிறான்.

இறைநம்பிக்கையாளனாக தனது வாழ்வின் நோக்கத்தை புரிந்து, அதன் அணைத்து அம்சங்களையும் இஸ்லாத்தின் அடிப்படைகளின்படி அமைத்துகொள்வதே அவனுக்கு மறுமை வெற்றியை பெற்றுதரும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 20, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOedm5jQVVaN0Z4eEk


மானம் காப்பதும் மனித உரிமையே..!!



ஒரு மனிதன் பல்வேறு காலகட்டங்களில் சிலரது தனி மனித குறைகள் மற்றும் தவறுகளை பிரர் முன் கூறி அவரை சிறுமை படுத்துவதும் அவரது மானத்தை பறிக்கும் விடயமே.

ஒரு இறைநம்பிக்கையாளன் தனது சகோதரனின் குறைகளை யாருக்கும் தெரியாது மறைத்து வைப்பதன் மூலம் அவருக்கு மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட ஓர் பெண் குழந்தைக்கு உயிர் கொடுத்த பலனை பெற்றுதரும். அப்படி நடப்பதன் மூலம் அந்த மனிதன் தன்னை திருத்திக்கொள்ள நல்ல சந்தர்ப்பத்தையும் இறைவன் வளங்கிடக்கூடும். பிற முஸ்லிமின் மானத்தைக் காப்பது ஒவ்வோர் முஸ்லிமுக்கும் கடமையாகும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 13, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

சோதனை மேல் சோதனை..!!



மனிதன் தனது வாழ்நாளில் சிறியது முதல் பெரியதாக பலவித சோதனைகளை சந்திப்பதே வாழ்வின் நியதி. ஒரு முஃமீன் தனக்கு வரும் சோதனைகளை எவ்வாறு கருத வேண்டும் அதனை வென்றெடுக்க இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறைகள் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: அக்டோபர் 06, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

ஆடம்பர சமூகமும் அதன் அவல நிலையும்..!!


மத்திய கிழக்கு நாடுகள் முதல் தற்போது பர்மா வரை முஸ்லிம் சமூகம் பல வகையான அழிவுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கிறது அன்றாட செய்தியாய் கேட்டும் கண்டும் வருகிறோம்.

இப்படி முஸ்லிம் சமூகம் உலகம் முழுவதும் அடக்குமுறைகளுக்கும் இழப்புகளுக்கும் உள்ளாவதன் காரணம் வெறுமனே பெரும்பான்மை முஸ்லிமல்லாத சமூகத்தின் அதன்மீதுள்ள வெறுப்பா அல்லது அதனையும் தாண்டியதா என ஆழ்ந்து சிந்தித்தால், அதற்காண காரணமாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, முஸ்லிம் சமூகத்தில் நிலவும் ஒற்றுமையின்மை, மற்றொன்று முஸ்லிம் சமூகத்தில் வேரூன்றிவிட்ட ஆடம்பரங்களும் அனாச்சாரங்களும் என்பதனை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: செப்டம்பர் 29, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeb3dJZEtZa3JDMVk