Masjidhul Ihsaan - Coimbatore

சமூகப்பொறுப்புணர்வும் நாமும்..!!


இந்திய முஸ்லிம் சமூகம் சந்தித்துவரும் பலவிதமான எதிர்ப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமது செயல்பாடுகள் எவ்வாறு அமைந்திட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: ஏப்ரில் 7, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeV2RMVnBBOTFwV0U


விமர்சனங்களுக்கான பதில் நற்குணத்தை கொண்டு..!!



பன்னெடுங்காலமாக இஸ்லாம் மீதும் இஸ்லாமிய சமூகம் மீதும் எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் வசைகளுக்கும் இஸ்லாமிய சமூகம் பல்வேறான முறைகளில் எதிர்வினையாற்றி வந்திருக்கிறது. அது, உணர்ச்சிவசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுதல் முதல் திரும்ப தரம்தாழ்ந்த வசைகளை கொடுப்பதுவரை என பல வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நபிகளார் (ஸல்) அவர்கள் மீதான அல்லது இஸ்லாம் மீதான விமர்சனங்களுக்கான அவர்களது எதிர்வினை அவரது நல்லொழுக்கம் மற்றும் நற்குணத்தை கொண்டே பதில் வழங்கினார். அதனை பின்தொடர்ந்தே இஸ்லாமிய சமூகமும் நற்குணத்தையும் ஒழுக்க விழுமியங்கள் கொண்டே விமரசனங்களுக்கான பதில்களை வழங்கிட வேண்டும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 31, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeRE1qNlZudXI5M0k

தண்ணீர் சேமிப்பு..!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது பள்ளியில் தொழுகைக்காக ஒழுசெய்ய மட்டும் வாரம் சுமார் 10,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தபடுகிறது
கோவையில் 100 பள்ளிகளுக்கு மேல் உள்ளது சுமார் ஒருநாளைக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கோவை நகர் பகுதிகளில் ஒழுசெய்யபட்ட தண்ணீர் சாக்கடையில் கலந்து கொண்டு இருக்கிறது
தற்போதய வறட்சியால் நகர் பகுதி பள்ளிவாசல்களில் ஒழு செய்ய கூட தண்ணீர் இல்லமால் தண்ணீர் வெளியே விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலை நம் பகுதிகளிலும் ஏற்பாடாமல் இருக்கவும், கோடை கால வறட்சியை சமாளிக்கவும், நாம் கோவை மாநகரின் நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், நாம் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில், நம் பள்ளியில் ஒழுசெய்யும் தண்ணீரை பூமிக்கு அடியில் செலுத்துவதால் நம் பகுதியின் நீர்மட்டம் உயரும். நம் பள்ளிவாசலில் இவ்வகையில் 5 அடி விட்டதில், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு அதில் நீரை சுத்தம் செய்ய (RAIN WATER HARVESTING SYSTEM) RWH சுத்திகரிப்பு முறையில் தேவையான கற்கள், இன்னும் அதற்க்கு தேவையான பொருள்களை இட்டு வேலை நடைபெற்று வருகின்து. இதனால் நம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
கோவையில் முதல் முறையாக ஒழு செய்யும் தண்ணீரை சேகரிக்கும் முறை நம் பள்ளியில் துவங்கி உள்ளோம்.
இறைவனின் அருட்கொடையான நீரை சாக்கடையில் கலந்து விரயம் ஆகாமல் மீண்டும் அந்த நீரை மக்களின் பயன்பாடிற்க்கும், பள்ளியின் பயன்பாடிற்க்கும் தூய்மையாக வழங்கும் முயற்சியில் நமது ஜமாஅத் முயற்சி எடுத்துள்ளது.
அடுத்தக்கட்ட முயற்சியாக கோவை கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹுதா, ஒப்பணகார வீதி அத்தார் ஜமாஅத் பள்ளிவாசல், RS புரம் குர்ரதுல் அயன் பள்ளிவாசல்களில் தண்ணீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் முயற்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது
இந்த தண்ணீர் சேகரிப்பு முறை கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இப்படிக்கு,

மஸ்ஜிதுல் இஹஸான் நிர்வாகம்
தினமலர் வலைதளத்தில் ஒளிபரப்பப்பட்ட காணொளி...
http://www.dinamalar.com/video_main.asp?news_id=92367&cat=32

பாரூக் கொலையும் – சமூகத்தின் செயல்பாடுகளும்..!!


கோவையில் மார்ச் 16, 2017 அன்று பாரூக் என்ற இளைஞர் சமூக விரோதிகள் சிலரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பபட்டது.

பாரூக் கடந்த சில வருடங்களாக கடவுள் மறுப்பு சிந்தனைகொண்டு இஸ்லமிய மார்க்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்ததாகவும் அதனாலேயே அவரது நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார் எனும் கருத்துகளும் பரப்பபட்டது.

இந்த நிலையில், முஸ்லிம் சமூகம் இவ்வாறான பதட்டமான சூழலில் எவ்வாறு ஓர் குழப்பமான மனநிலைக்கு தள்ளப்படுவது நெடுங்காலமாய் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. அந்த சூழலை எதிர்கொள்ள தேவையான நிதானம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படி அந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு முஸ்லிம் சமூகமும் அதன் தலைமையும் தயக்கம் காட்டிவருகிறது. இந்நிலையின் இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் எவ்வாறான செயல்பாடுகளை முஸ்லிம் சமூகம் கூட்டாக மேற்கொள்வேண்டும் என்பதைக் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 24, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்



மனோஇச்சைப்படி வாழ்வும் - கடிவாளமற்ற குதிரையும்..!!


மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையில் பெருமதிப்புடையது அவனுக்கு வழங்கப்பட்ட வாழ்நாளேயாகும். அவன் தனது வாழ்நாளை எவ்வாறு பயன்படுத்திகிறான் என்பதைப்பொறுத்தே அவனது மறுமை ஈடேற்றம் அமையும் என்பது இறைநியதி.

மனிதன் இறைவனின் மீது நம்பிக்கை கொண்டவனாகிலும் அல்லது நம்பிக்கையற்றவனாகிலும் அவன் தனது வாழ்நாளை தனது மனோஇச்சைக்கு பணிந்து மனம்போனபோக்கில் வால்வானாகில் அவனது வாழ்வு கடிவாளமற்ற குதிரையின் மீதான பயணம்போல இலக்கில்லாத ஒன்றாக அமைந்துவிடும்.

அப்படி இலக்கின்றி வாழ்வை கடத்துவதை விடுத்து இறை கட்டளைகளை பின்பற்றி அவனது கருணைக்கு உகந்தவனாக மனிதன் தனது வாழ்நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரையின் முதல் பகுதி.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeZG9neXh4NGNGLTA


நீரின்றி அமையாது உலகு..!!



இறைவனது படைப்புகள் அனைத்திலும் மிக வளமிக்கதும், உயரினங்கள் வாழக்கூடிய சூழல் மிக்கதுமான இந்த பூமிப்பந்து இந்த அண்டவெளியில் தனித்தன்மை கொண்டதாக படைத்திருப்பதன் மூலமே இயற்கையின் மேல் தனது வல்லமைக்கு சான்றாக அமைத்திருக்கிறான்.

அதிலும், மனிதன் மற்றும் தாவரங்கள் உயிர் வாழத்தேவையான நீரை இறைவன் தேவையை கருது வானிலிருந்து இறக்கிவைப்பதாக கூறுகிறான். இன்றுவரை தனது அறிவியல் அறிவின் மூலம் பல்வேறு படைப்புக்களை மனிதன் படித்திருந்தாலும், அவனால் நீரை இறைவன் தரும் இயற்கை தன்மையில் படைக்க முடியவில்லை.

உலகில் உயிரினங்கள் வாழ்ந்திட இறைவனின் அருட்கொடையில் சிறந்ததாக விளங்கிடும் நீரின் இன்றியமையாத தேவை குறித்தும், மனிதனின் அஜாக்கிரதையால் நீர்வளத்தை மாசுபடுத்துவதுடன் உயிர்ணகளின் இருப்பிற்கு ஆபத்தையும் உண்டாக்கிக்கொண்திருக்கிறான். இறைவன் நீரைக்குரித்தும் அதன் தன்மையைக்குரித்தும் தனது இறுதி வேதத்தில் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிடுகிறான் என்பதையம் நீரின் இன்றியமையாத தன்மையை உணர்ந்து அதனை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 10, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOecEdTWkRYRWFUeHc


கல்வியும் அறியாமையும்..!!


ஒரு மனிதன் ஒரு விஷயத்தைக் குறித்த அறிவு பெற்றிருந்தால் அதன் மீது அளவு கடந்த நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பான். அதுவே, அதைக்குறித்த அறிவு இல்லாவிடில் அதனை அவமதிப்பதும் அதனை தீவிரமாக எதிர்க்கவும் செய்கிறான். இதனைப்போலவே, இஸ்லாமிய மார்க்கம் குறித்த அறிவின்மையே அதனை எதிர்ப்பவர்களிடம் காணமுடிகிறது.

அறிவைப்பெருதல் என்பது வெறுமனே அதனைக் குறித்த தகவல்களைப்பெருவது மட்டுமல்ல, அதனால் மனித வாழ்வில் ஏற்படும் நன்மை-தீமைகளை ஆராய்ந்து நன்மையானவற்றை மேற்கொள்வதும் அறிவின் ஓர் அங்கமாகும்.

இதனடிப்படையிலேயே, இஸ்லாமிய மார்க்கம் குறித்த அறிவை நமது குழந்தைகளுக்கு கொடும்ப்பது மட்டுமல்லாது, அது கூறும் வாழ்வியல் கோட்பாடுகளை பகுத்து அதனடிப்படையில் வாழ்வினை செலுத்துவதும் அறிவின் பண்புநலன்களில் முக்கியமான ஒன்று என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: மார்ச் 3, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..



இஸ்லாமிய கண்ணோட்டத்தில் குழந்தைகள் வளர்ப்பு..!!


“இறைவா, எங்கள் மனைவி மக்களை கண்ணுக்கு குளிர்ச்சியானவர்களாக ஆக்கிவைப்பாயாக, மேலும் எங்களை இறைநம்பிக்கையுடையவர்களுக்கு தலைவர்களாய் ஆக்குவாயாக” என தனது திருமறையில் கற்றுத்தரப்படும் பிரார்த்தனையின் மூலம் குழந்தைகளை எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை இறைவன் நாடுகிறான் என்பதை விளக்குவதாய் அமைந்துள்ளது.

ஒரு முஃமீன் தனது குழந்தைகளை வளர்ப்பதில் மூன்று பருவங்களாக பிறித்து, அதில் முதல் ஏழு வயது வரை குழந்தையோடு குழந்தையாக விளையாடி அவர்களது மதிப்பை பெறுதல், அடுத்த ஏழு வருடங்கள் அவர்களுக்கு நற்பண்புகளையும் இஸ்லாமிய அடிப்படைகளையும் கர்ப்பிப்பதிலும், அடுத்த ஏழு வருடங்கள் அவர்களது நண்பர்களாய் இருந்து அவர்களது தவறுகளை திருத்தி நற்போதனைகள் புரிவதும் அவரது கடமை என்கிற இஸ்லாமிய வழிகாட்டுதல்களை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: பிப்ரவரி 24 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..


குழந்தைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கு..!!


இறைவன் மனிதர்களில் பெரும்பான்மை மக்களுக்கு கொடுத்து சிலருக்கு மட்டும் ஓர் அருட்கொடையில் இருந்து தொலைவில் வைத்திருப்பான், அதுதான் குழந்தைகள் எனும் அருட்கொடை. தந்தை என்ற ஓர் ஆணின் அந்தஸ்து உயரும்போது அவனுக்கு அவன் விரும்பாமலேயே கட்டாயமான சில பொறுப்புகளும் சுமத்தப்படுகிறது.

அதில் ஒன்று தான் தனக்கு கிடைத்த குழந்தை செல்வத்தை நல்ல குணநலன்களுடன் இறைவனுக்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாக வளர்ப்பது.

தந்தை-பிள்ளை என்ற உறவு உலகில் வாழும் வருடங்களோடு முடிந்துவிடாமல், மறுமை வரை தொடரக்கூடிய பிணைப்பாக இருப்பதும் அந்த மனிதன் தனது மரணத்திற்கு பிறகு தனக்காக பிரார்திக்ககூடிய மக்களை விட்டுச்செல்வதே அவனுக்கு மறுமை வரையில் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதை விளக்கும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: பிப்ரவரி 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்..

https://drive.google.com/drive/folders/0B7o0wyRQOYOeUVRMeHUtWGJIa0E


முஃமீன்களுக்கு இருக்கவேண்டிய உயரிய பண்புகள் (மலையாளம்)..!!


நபிகளார் வார்த்தெடுத்த ஆளுமைகளான சஹாபாக்கள் எவ்வாறான உயரிய பண்புநலன்கள் கொண்டிருந்தனர் என்பதையும், அந்த பண்புகளினால் எவ்வாறு அவர்கள் உயர் நிலையை அடைந்தனர் என்பதையும் எடுத்துக்காட்டாக கொண்டு முஃமீன்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் குறித்தும் அவர்களது கடமைகளைக் குறித்தும் விளக்கும் ஜுமுஆ சிறப்புரை (மலையாளம்).

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

உரை: மௌலவி நஹாஸ் மாலா
     அகில இந்தியத் தலைவர்,
             இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)

இந்த உரையினை கேட்க்க/பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கினை சொடுக்கவும்..




பரிகாசிப்பதும் தீமையே..!!


மனிதன் தனது நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இருக்கும்பொழுது அவர்களைக் கவருவதற்காக பல நபர்களை வேடிக்கைக்காக அவர்களது அங்க அசைவுகள், பேச்சு, நடை, உடை, பாவனை போன்றவற்றை பரிகாசிப்பதும் அதனைக்கொண்டு மற்றவர்கள் மத்தியில் தன்னை உயர்ந்தவன் என காட்டிக்கொள்வதும் அம்மனிதனின் இம்மை-மறுமை இரண்டையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

அவ்வாறு பரிகாசம் செய்பர்வர்களின் கைசேத நிலையினையும், இந்த பழக்கம் இஸ்லாமிய நற்பண்புகளுக்கு முரணான செயல் என்பதையும் விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

ஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: பிப்ரவரி 3, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்