மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடையில் பெருமதிப்புடையது அவனுக்கு வழங்கப்பட்ட வாழ்நாளேயாகும். அவன் தனது வாழ்நாளை எவ்வாறு பயன்படுத்திகிறான் என்பதைப்பொறுத்தே அவனது மறுமை ஈடேற்றம் அமையும் என்பது இறைநியதி.
மனிதன் இறைவனின் மீது நம்பிக்கை கொண்டவனாகிலும் அல்லது நம்பிக்கையற்றவனாகிலும் அவன் தனது வாழ்நாளை தனது மனோஇச்சைக்கு பணிந்து மனம்போனபோக்கில் வால்வானாகில் அவனது வாழ்வு கடிவாளமற்ற குதிரையின் மீதான பயணம்போல இலக்கில்லாத ஒன்றாக அமைந்துவிடும்.
அப்படி இலக்கின்றி வாழ்வை கடத்துவதை விடுத்து இறை கட்டளைகளை பின்பற்றி அவனது கருணைக்கு உகந்தவனாக மனிதன் தனது வாழ்நாளை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் ஜுமுஆ சிறப்புரையின் முதல் பகுதி.
மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை
நாள்: மார்ச் 17, 2017
உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்
https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeZG9neXh4NGNGLTA
https://drive.google.com/file/d/0B7o0wyRQOYOeZG9neXh4NGNGLTA