Masjidhul Ihsaan - Coimbatore

சமகால ஊடமும் முஸ்லிம்களும்..!!



உலக வரலாற்றில் கப்பல்படை யாரிடம் இருந்ததோ 18-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருந்தது, விமானப்படை யாரிடம் இருந்ததோ 19-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருந்தது, ஊடகம் யார் கையில் இருக்கிறதோ 20 & 21-ஆம் நூற்றாண்டு அவர்களுடையதாய் இருக்கிறது.    

உலக மக்களின் வாழ்வியல் மட்டுமல்லாது சிந்தனைப்போக்கினை மாற்றிடும் வல்லமை சமகால ஊடகங்களிடம் இருக்கிறது. எப்படி நாடோடிகளாய், உலகப்போரின் அகதிகளாய் மாறிய சமூகம் ஊடகத்தின் தாக்கத்தால் இன்று அணைத்து வல்லரசுகளையும் ஆட்டிப்படைப்பதோடு, தனக்கென ஒரு நாட்டை பல்வேறு மனித உரிமை மீறல்களினாலும் அமைத்துக்கொண்டுள்ளது. நம் நாட்டின் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள் கூட இதே ஊடகத்தின் கருத்துருவாக்கத்தின் மூலம் தான் ஆட்சியை பிடித்தார்கள் என்பது தமக்கு படிப்பினையாய் இருக்கும்போதும்கூட முஸ்லிம் சமூக மக்கள் நவீன ஊடகங்களில் தங்களது பங்களிப்பினை வழங்கிட முன்வருவதில்லை.

எந்த சமூகம் தனது வரலாறு மற்றும் சமூக பங்கினை சரிவர பதிய தவறுகிறதோ அந்த சமூகத்திற்கு எதிராக வரலாற்று திரிப்புகள் மேற்கொள்ளப்படும்போது அந்த சமூகத்தால் அதானை எதிர்கொள்வது சிரமமான ஒன்றாக மாறிவிடும். ஆகையால் நமது சமூகத்தின் உண்மை வரலாறு மட்டுமின்றி இஸ்லாமிய வாழ்வியல் நெறியினை சரியான கோணத்தில் வெகுஜன மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்வதற்கு ஊடகத்தின் துணைகொண்டு செயல்பாடுகள் அமைந்திட வேண்டும் என்பதை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: ஜனாப். V.S. முஹம்மது அமீன்
     (மக்கள் தொடர்பு & ஊடகச் செயலாளர், JIH
     துணை ஆசிரியர், சமரசம் இதழ்) 

நாள்: ஏப்ரல் 6, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...