உலக மக்களுக்கு நேரிய வாழ்வியலை எடுத்துரைத்திடவும் அவர்களை சத்தியத்தின் பாதையில் அழைப்பதற்கும் இறைவனால் உலகில் அவனது பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளது முஸ்லிம் சமூகம். ஆனால், இன்றைய முஸ்லிம் சமூகம் “மக்களுக்கு சான்று பகரும்” தனது பொறுப்பை தட்டிக்கழிப்பது மட்டுமல்லாது அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன் மனம்போன போக்கில் தனது வாழ்வியலை அமைத்துக்கொண்டு இருக்கிறது.
மனித சமூகம் சீர்திருத்தம் பெற ஒழுக்கம், நீதி, வாழ்வியலில் அனைத்து துறைகளிலும் முன்மாதிரி அமைந்திட வேண்டிய சமூகம் இன்று பல்வேறு சீர்கேடுகளில் சிக்கி சிதறுண்டு கிடக்கிறது.
இவைகளில் இருந்து சமூகம் மீண்டு தனது முழுமுதல் கடமையான மக்களுக்கு சான்று பகர்தலையும் சமூகத்தை சீர்திருத்துவதிலும் முனைப்புடன் செயலாற்றிட முன்வர வேண்டும் என்பதை உணர்த்திடும் ஜுமுஆ சிறப்புரை.
உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி
நாள்: மார்ச் 30, 2018
@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை
இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...