Masjidhul Ihsaan - Coimbatore

இறைப்பாதுகாப்பும் நமது செயல்பாடுகளும்..!!



முஸ்லிம் சமூகத்தில் சிலர் தனியாகவோ குழுவாகவோ தங்களால் மட்டுமே இந்த சமூகத்தை பாதுகாக்க முடியும் எனும் எண்ணத்தில் மாபெரும் தியாகம் செய்வதாக எண்ணிக்கொண்டு செய்திடும் செயல் சமூகத்தை எவ்வளவு பதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதைப்பற்றி ஒருபக்கம் இவர்கள் கவலைகொள்வதில்லை என்றால் மறுபக்கம் இவர்கள் இதுபோன்ற செயல்களை செய்துவிட்ட பின்னர் நிகழ்த்திடும் அநீதிகளுக்கு இந்த சமூகம் அமைதிகாப்பதன் மூலம் மேலும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.  .     

இவர்கள் இதற்கும் ஒருபடி மேலே சென்று தங்களைப் படைத்த இறைவனின் பாதுகாப்பை மறந்து தங்களால் மட்டுமே இந்த சமூகத்தை காத்திட முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இப்படியான சூழலில் முஸ்லிம் சமூகம் இவர்களை புறந்தள்ளிவிட்டு இறைவனின் பாதுகாப்பை பெறுவதற்கும் சமூகத்தை வலுவானா கட்டமைப்பில் வார்த்திடவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

உரை: மௌலவி M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

நாள்: ஏப்ரல் 27, 2018

@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

இந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...