Masjidhul Ihsaan - Coimbatore

கலப்படமில்லா இஸ்லாமிய சமூகம் - Part 2..!!


கடந்த வாரம் உணவுப்பொருட்களில் கலப்படம் காரணமாக நாம் அதனை சரி செய்திட மேற்கொள்ளும் விழிப்புணர்வும் சீர்திருத்தம் பெற்றிட பெரும் முயற்சிகள் மேற்கொகிறோம். அதேபோல் நமது வாழ்வின் அணைத்து துறைகளிலும் இறைநெறி இன்றியமையாத அங்கம் வகிக்கவேண்டிய நிலை இல்லாமல் மனோயிச்சையின் அடிப்படையிலும், அனாச்சாரங்களின் அடிப்படையிலும் நமது வாழ்வியலை அமைக்கும்போது அது மாசடைகிறது.

இப்படிப்பட்ட சூழலில் முஸ்லிம்களின் மீது இறைவன் சுமத்தியுள்ள “முன்மாதிரி சமூகம்” என்ற அந்தஸ்தின் அடிப்படையிலும், நாம் ஏற்றிருக்கும் கலிமாவின் அடிப்படையில் “சாட்சி பகரும்” பொறுப்பையும் பிற சமூகத்தவரிடம் எவ்வாறு கொண்டு சேர்க்கப்போகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலையில் இன்றைய இஸ்லாமிய சமூகம் இருக்கிறது. அல்லாஹ் நம் சமூகத்தின் மீது சுமத்தியுள்ள இந்த “சாட்சி பகரும்” பணியை செய்திட நாம் முதலில் நம் சமூகத்தில் புகுத்தப்பட்டுள்ள கசடுகளையும் கலப்படங்களையும் களைந்திட வேண்டிய அவசியத்தையும், இறைமார்க்கம் பிற சமூக மக்களிடமும் சென்றடையக்கூடிய  சிறந்த முன்மாதிரிகளாக நாம் மாறிட வேண்டும் என்பதை விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.

மஸ்ஜிதுல் இஹ்ஸான் @ கோவை

நாள்: நவம்பர் 17, 2017

உரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

இந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1269xl7IgPz7VqtbpzFwrD88ld4XAB9Gj